“அழுது கொண்டே இருந்தாலும் அழுது கொண்டே இரு”
நமது முன்னோர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரையில் விவசாயத்தை முக்கிய செயல் உழவு என்றால் அது மிகையாகாது… எவ்வளவு நன்மைகள் உள்ளது. உழவு செய்யும் போது மண்ணில் வளம் பெருகும் எனவே இன்றைய பழமொழி விளக்கத்தில் உறவின் முக்கியத்துவத்தை காணலாம்.
அருண் என்பவர் விவசாயி ஒருவரின் மகன்.. அவனுக்கு அவனுடைய தந்தையும் விவசாயத்தில் சற்று அதிக ஆர்வம் கொண்டவர்கள்.. கடந்த மூன்றாண்டுகளாக சில காரணங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை … ஆனால் அவர்கள் வயலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உழவு செய்வதை நிறுத்தவில்லை…
… இதைக்கண்ட அருண்… அப்பா நாம் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த விவசாயம் செய்வதில்லை ஆனால் நிலத்தினை தவறாமல் உழ வு மட்டும் செய்து விடுகிறீர்கள் ஏன் அப்பா என்றான் அதற்கு இதனால் ஒரு பயனும் நமக்கு இல்லையே என்றான்.
அதற்கு அவனது அப்பா “அழுது கொண்டே இருந்தாலும் உ ழுது கொண்டே இரு” என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள்” சொன்னார்கள் இதில் தான் அதிக நன்மை உள்ளது என்றார்..
அதைக்கேட்ட அருண் ஏனப்பா அவ்வாறு சொல்கிறீர்கள் அதோடு இதனால் நமக்கு என்ன பயன் என்பதனை எனக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்று கேட்டான்
அதற்கு அவனது தந்தை நாம் விவசாயம் செய்தாலும் விவசாயம் செய்யாவிட்டாலும் உழவு செய்து கொண்டுதான் இருக்கவேண்டும் ஏனென்றால் இவ்வாறு உழவு செய்யும்போது நிலத்தில் முதலாவது களைகளும் வேருடன் அழிக்கப்படுகிறது அதோடு மண்ணின் வளம் அதிகரிக்கிறது அனைத்துப் பகுதிகளும் ஊட்டச்சத்துக்கள் பரிமாறப்படுகின்றது என்றார்.
எனக்கு உழ வு பற்றி சொல்லுங்க அப்பா என்றான் அருண்… அதற்கு அவனது தந்தையை நம் பயிரிடும்போது மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை அப்படியே கடைப்பிடித்து அல்லது சிறு சிறு மாறுதல்கள் செய்து பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு உழ வு என்று பெயர்.
இந்த முறையில் ஆழமாக உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும் நோய்களும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணிற்கு மேலே கொண்டு வந்தது பறவைகளால் அழிக்கப்படுகின்றன என்றார்.
அப்பா இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்ற வேண்டுமா என்று கேட்டான் அருண்..
அதற்கு அவனது தந்தை ஆமாம் பின்பற்ற வேண்டும். இதுதான்” அழுது கொண்டே இருந்தாலும் உ ழுது கொண்டே இரு” என்ற பழமொழி உணர்த்துகிறது என்றார்.
நம்மைப் போல மற்ற விவசாயிகள் பயிர் செய்யத் தவறினாலும் உழவு செய்ய தவறுவதில்லை என்பது எனக்கு இப்போதுதான் புரிகின்றது இனி உழ வு பற்றி யாராவது கேட்டால் நானே அதற்கான விளக்கத்தைக் கூறி விடுவேன் என்றான்