பப்பாளி சாகுபடி செய்த விவசாயி திரு நேதாஜியின் அனுபவம்
பப்பாளி சாகுபடி தொழில் நுட்பம்
பட்டம் : ஆண்டு முழுவதும் பயிரிடலாம்
உழவு : நன்றாக உழவு செய்து கடேசி உழவில்
4 டன் தொழுவுரம் இடவேண்டும்
மண் :
நல்ல வடிகால் வசதி உள்ள மண். கலர் உவர் மண்ணில் வராது
ரகம் : ஜிந்தா
நாற்று : ஒரு ஏக்கருக்கு 1000 நாற்றுகள் தேவைப்படும்
விலை : 1 நாற்றின் விலை ரூபாய் 5. 55
கம்பெனி : செந்தில் பப்பாய கம்பெனிக்காரர்கiள நாற்றுகளை
கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள்.
இடைவெளி : வரிவைக்கு வரிசை 7 அடி செடிக்கு செடி 7
உரம் நிர்வாகம்
25 வது நாள்
ஒரு மரத்துக்கு 100 கிராம் டி.ஏ.பி போடனும்
60 வது நாள்;
டி.ஏ.பி பொட்டாஷ் இரண்டையும் கலந்து
ஒரு மரத்துக்கு 100 கிராம் போடனும்
120 வது நாள்;
ஒரு டன் மண்புழு உரத்தில் 6 கிலோ அசோஸ்பைரில்லம்> 6 கிலோ பாஸ்போ பாக்டீரியா இரண்டையும் தண்ணீர் தெளித்து கலந்து நிழலில் கோணி சாக்கு அல்லது தென்னை ஓலை கொண்டு மூடி ஒரு வாரம் வைத்திருந்து பிறகு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி ஈரம் இருக்கும் பொழுது ஒரு மரத்துக்கு
500 கிராம் வீதம் போடனும்
நீர் நிர்வாகம்
வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
இவற்றிற்கு சொட்டு நீர் பாசனம் முறையை பயன்படுத்தினால்
பப்பாளியில் பால் மகசூல் குறைந்து காணப்படும்.
நடவு செய்து 5 -6 வது மாதத்தில் பால் எடுக்கலாம் ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு முறை பால் எடுத்தால்
25 கிலோ பால் வரும்
நாம் உரம் கொடுத்தால்
ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 50 கிலோ பால் எடுக்கலாம்
வாரம் ஒருமுறை பால் எடுக்கனும்
பால் எடுப்பது இரவு நேரத்தில் எடுத்தால் பால் விணாகாமல் நிறைய வடியும்
தண்ணீர் பாய்ச்சும் பொழுது பஞ்சகவ்யா 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர்; பாயும் பொழுது ஊற்றி விடனும்
விலை : ஒரு கிலோ பாலின் விலை 112 ரூபாய்
பால் எடுப்பதற்கு கூலி ஒரு கிலோ விற்கு 30 ரூபாய்
கோயமுத்தூரில் உள்ள செந்தில் பப்பாய கம்பெனிகாரர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
சென்டர் : ஒட்டன்சத்திரத்திலும் உள்ளது
ஒரு மரத்தில் 60 நாட்கள் வரை பால் எடுக்கலாம் அதன்பிறகு அந்த காயை ஒரு கிலோ 3 ரூபாய்க்கு எடுத்துக் கொள்வார்கள்
ஒரு ஏக்கருக்கு 10 டன் காய் கிடைக்கும்
பப்பாளி நடவு செய்து இரண்டு வருடம் வரை மகசூல் கிடைக்கும். பப்பாளியில் நல்ல லாபம்தான்.
செலவு போக ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்குமேல்
வருமானம் கிடைக்கும்
நோய்
வேரழுகல் நோய் வரும்
அவற்றை கட்டுப்படுத்த ரிடோமில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வைரஸ்நோய் மேகமூட்டமாக இருந்தால் வைரஸ்நோய் வரும் அது சரிவர பாதிக்காது வைரஸ் தாக்கிய மரத்தை எடுத்து விடலாம்.
பப்பாளி பயன்
பேக்கரிசெய்ய ஜாம் தயாரிக்க
மாத்திரை ஊசி மருந்து தயாரிக்க
டூட்டி புரூட்டி தயாரிக்க பயன்படும்