தற்போது அனைவரும் இயற்கை விவசாய முறையில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர் அப்படி சிலர் இயற்கை உரங்கள் தாங்களே தயாரித்து ஏற்படுத்துகின்றனர் அவ்வாறு பயன்படுத்தும் இயற்கை உரங்களில் கடல்பாசி உரம் ஒன்று.
கடல்பாசி உரம் என்பது இந்திய கடலில் கிடைக்கும் அல்லது வளரும் சிகப்பு பழுப்பு நிறம் கடல்பாசி களிலிருந்து 100 சதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இயற்கை உரமாகும்.
இரசாயனங்கள் இன்றி தயாரிக்கப்படும் இவ்வகை கடல்பாசி உரங்கள் அபரி விதமான மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆக்ஸிஜன் ஜி ப்ரலில் போன்றவை உள்ளன இவை தோலிலுள்ள செல்களை துரிதப்படுத்தி பூ உதிர்வதை தடுக்கிறது இதில் உள்ளன நுண்ணுயிரியல் செயல்பாட்டை அதிகரித்து வறட்சியை தாக்கும் திறன் மண்ணுக்கு அளிக்கிறது.
இதில் உள்ள புரதச் சத்துக்களும் அமினோ அமிலங்கள் மற்றும் விட்டமின்கள் பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தி அதிக மகசூல் கொடுக்கிறது கடல்பாசி உரங்களையும் அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல் கரும்பு மா பலா மஞ்சள் திராட்சை ஏலக்காய் தேயிலை காப்பி மிளகு காய்கறிகள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் மேலுரமாக மற்றும் அடி உரமாகவும் பயன்படுத்தலாம்
இதனால் மகசூல் 35% வரைஅதிகரிக்கிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அதிகரிக்கிறது மண்ணின் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது வளர்ச்சி மற்றும் பூக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.