நாட்டு மாட்டு சாணம், ஆட்டுப்புழுக்கை, இலை தழைகள், எரு
மாட்டுச்சாணம் ,ஆட்டுப்புழுக்கை ,இலை தழைகள் ,எரு ஆகியவற்றை சம விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதுவே கலப்பு உரம் ஆகும்.
இவற்றை கலந்தவுடன் வயல்களில் பயன்படுத்தலாம்.
இதில் சமையலறை கழிவுகள் குப்பைகள் என மட்கக்கூடிய அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
இவற்றைஉழவுக்கு முன்புந்நிலத்தில் தூவிவிட்டு உழுது பயிர்களை பயிரிடலாம்.
கலப்பு உரம் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
இதில் அனைத்து இயற்கை இடுபொருட்கள் சம அளவில் இருப்பதால் பயிர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது.
இதனால் பயிர்கள் நன்கு வளரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.