பல வருடங்களாக பூசணி மற்றும் பரங்கி வகைகள் மனித இன உணவுக்காக பயன்பட்டு வருகிறது. நாட்டுப் பூசணியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் இதை மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நீர் வசதி குறைந்த மாவட்டமாக இருப்பினும் இங்குள்ள விவசாயிகள் குறைந்த நீரைக் கொண்டு சாகுபடி செய்யக் கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு வருகின்றனர்.