இலைப்புள்ளி
கருவேப்பிலையை தாக்கும் இலைப்புள்ளி நோயாகும். இதில் இருந்து பாதுகாக்க கார்பன்டாசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
செதில் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்
இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த டைமெத்தொஎட் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
நடவு செய்த ஆறு மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.பூமியில் இருந்து 10 சென்டிமீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு ஆண்டு கழித்து ஒரு எக்டர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும். 23 வருடங்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2500 கிலோ 5 வருடங்கள் கழித்து 3500 முதல் 5 ஆயிரம் கிலோ வரையும் கருவேப்பிலை கிடைக்கும். நன்கு பாதுகாப்பு வளர்க்கப் பட்ட மரம் 25 வருடங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கும்.