தென்னையில் அதிக மகசூல் கிடைக்க
தற்பொழுது மழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்துள்ளது இந்த மழையை பயன்படுத்தி தென்னை நடவு செய்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன மரங்களுக்கு பசுந்தாள் உரப்பயிரான சணப்பு, தக்கப்பூண்டு, கொளுஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதைத்து 30 நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும்
அல்லது சணப்பு, தக்கைபூண்டு, கொளுஞ்சி விதைக்க முடியவில்லை என்றால் கொள்ளு, போன்ற பயறுவகை பயிர்களில் ஏதாவது ஒன்றை விதைத்து பூக்கும் தருணத்தில் (30 நாளில்) மடக்கி உழவுசெய்ய வேண்டும்.
எருக்கம் இலை ஒரு கிலோ, ஆவாரம் இலை ஒரு கிலோ, கொழுஞ்சி ஒரு கிலோ இவற்றை தென்னை மரத்தை சுற்றி போட்டு மண்ணால் மூடி விடவேண்டும்
அல்லது ஆட்டு எரு ஒரு மரத்திற்கு 30 கிலோ அளவு எடுத்து நொருக்கி போட்டு தண்ணீர் பாய்ச்சலாம்
இவ்வாறு செய்தால் மண்வளம் கூடும்
மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கும்
மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’
சொறிக்காய்கள் தோன்றாது , எண்ணெய் சத்து அதிகரிக்கும் காயின் தரம் நன்றாக இருக்கும் குரும்பை உதிராது
மண்ணில் பௌதீக குணங்கள் மேம்படுகிறது
மகசூல் அதிகரிக்கும்
தென்னந் தோப்புகளில் மழைபெய்த காரணத்தால் மரத்தின் வேர்பாகம் வெளியில் தெரிந்து கொண்டு இருக்கும் அவ்வாறு இருக்கும் மரத்தில் உள்ள வேர்பாகங்களை மூடிவிட வேண்டும்.
தென்னை நடவு செய்து 3 வருடங்கள் ஆன மரத்திற்கு நுண்ணூட்ட கலவைகளாக போரான் 50 கிராம், மெக்னீசியம் சல்பேட் அரைக்கிலோ, ஜிப்சம் 1 கிலோ இவற்றை கலந்து ஒரு மரத்திற்கு வைக்கவேண்டும்.
5 வருடங்களுக்கு மேல் உள்ள மரங்களுக்கு இவற்றின் அளவை இரண்டு பங்காக வைக்க வேண்டும். அதாவது ஒரு மரத்திற்கு சிங் சல்பேட் 10 கிராம், மெக்னீசியம் 60 கிராம் , போரான் 30 கிராம் என்ற விகிதத்தில் கலந்து மரத்தைச் சுற்றி 4அடி தள்ளி அரைஅடி ஆழம் பரித்து இவற்றை போட்டு தண்ணீர் விட வேண்டும்.,இத்துடன் ஜிப்சம் 2 கிலோ இவை நான்கும்கலந்த கலவை நுண்ணூட்ட உரமாகும் இவற்றை கலந்து ஒரு மரத்திற்கு வைக்கவேண்டும்
நுண்ணூட்ட உரம் வைக்கும்பொழுது மரத்திற்கு 5 அடி தூரத்தில் அரை அடி ஆழத்தில் மண்ணைவெட்டி அதில் நுண்ணூட்ட உரத்தை போட்டு மண்ணால் மூடி விட்டு தண்ணீர் பாய்ச்சலாம் அல்லது வயல் ஈரமாக இருக்கும் சமையத்தில் வைக்கலாம்.