தமிழகம் முழுதும் நடப்பு பருவத்தில், 5 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடியை மேற்கொள்ள, தோட்டக்கலைத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதிக வருவாய் (Higher revenue)
தமிழகத்தைக் கொரோனா 2-வது அலை உலுக்கியபோதிலும், விவசாயத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் காய்கறிகள், கீரை வகைகள், மூலிகைகளைச் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தது
நேரடி விற்பனை (Direct sales)
நேரடியாகக் காய்கறி விற்பனையில் விவசாயிகளை தோட்டக்கலைத் துறை ஈடுபடுத்தியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது எனவே
சாகுபடிக்கு தயார் (Ready for cultivation)
தற்போது, மாநிலம் முழுவதும் பருவ மழை பெய்து வருகிறது. விவசாயிகளும், நடப்பு பருவத்தில், காய்கறிகள் சாகுபடியை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர் மற்றும்
சாகுபடி இலக்கு (Production Target)
இதைப் பயன்படுத்திக் கொண்டு, சாகுபடி பரப்பை, 5 லட்சம் ஏக்கராக அதிகரிக்க, தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
உழவர் சந்தைகள் (Farmers’ markets)
விரைவில், மாநிலம் முழுதும், உழவர் சந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. அவற்றில் விற்பனை செய்வதற்கு காய்கறிகள், பழங்கள் அதிகளவில் தேவைப்படும். எனவே இதனைக் கருதி, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளிட்டவை, மானிய விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.