கம்பு – ஊட்டச்சத்துக் குறைபாடு
தழைச்சத்து
அறிகுறிகள்
குட்டை வளர்ச்சி, நுனிகளில் இளம் மஞ்சள் (அ) அடர் மஞ்சள் நிறமாக காணப்படும். பின் விளிம்புகளிலிருந்து நுனி வரை பரவும்
நிவர்த்தி
யூரியா 1% (அ) டி.ஏ.பி. 2% தழை தெளிப்பாக தெளித்தல் வேண்டும்.
மணிச்சத்து
அறிகுறிகள்
- தானிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
- மெல்லியதாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். ஆழ் பச்சை இலைகளில் ஆழ் சிவப்பு நிறமாக மாறிவிடும். இலைகள் செங்குத்தாக மற்றும் தோல் போன்று தோன்றும்.
நிவர்த்தி
தழை தெளிப்பான டி.ஏ.பி 2% 2-3 முறை தெளித்தல் வேண்டும்.
சாம்பல் சத்து
அறிகுறிகள்
- அடி இலைகளின் நுனி மற்றும் ஒரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்
நிவர்த்தி
- பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்.
சுண்ணாம்புச் சத்து
அறிகுறிகள்
- செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- இளம் இலைகளின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வால் போன்று இருக்கும்.
- சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில், இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும். பின் பழுப்பு நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி
கால்சியம் சல்பேட் 2%இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்
கந்தகச் சத்து
அறிகுறிகள்
வளரும் இலைகளில் பற்றாக்குறை காணப்படும். வளர்ந்து வெளிவரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
நிவர்த்தி
தழை தெளிப்பான் கால்சியம் சல்பேட் 2% தெளிக்கவும்
போரான்ச்சத்து
அறிகுறிகள்
இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்.
நிவர்த்தி
போராக்ஸ் 0.5%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
இரும்புச்சத்து
அறிகுறிகள்
- பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்.
- நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும்.
- அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
- புதிதாக தோன்றும் இலைகளில் பசுமை சோகை பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும்.
நிவர்த்தி
20-25 கிலோ ஃபெர்ரஸ் சல்பேட்டை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது 1% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.
தாமிரச்சத்து
அறிகுறிகள்
இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றோடு ஒன்று சுருண்டு உடைந்துவிடும்.
நிவர்த்தி
காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்
துத்தநாகப் பற்றாக்குறை
அறிகுறிகள்
- இளம் இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்
- புதிதாக வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்
- பசுமை சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்
- வெளிறிய வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்
- முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல் தோல் உரித்து காணப்படும்.
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் 20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்