இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சிவிரட்டிகள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை வீரியமும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
நாட்டு பசு கோமியம் ,புகையிலை ,பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வேப்ப இலை ஆகியவற்றை அரைத்து மண்பானையில் இட்டு கொதிக்க வைத்து மண்பானையை துணியால் மூடி 48 மணி நேரம் கழித்து நீரின் மேல் உள்ள துணியை நீக்கினாள் இருக்கும் தெளிந்த நீர்தான் இயற்கை பூச்சி விரட்டி ஆகும்.
இந்த நீரில் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் புழு பூச்சிகள் இறந்து விடும். இது அனைத்து வகையான பயிர்களுக்கும் உகந்தது.