இயற்கை களை கொல்லி :
நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..
முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..
களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..
பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..
அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை
இதனுடன் ஊற்றி கலக்கவும்..
பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..
(பயிருக்கு படாமல்)
அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..
இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும்
தருவதில்லை,
காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..
வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..
கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..
இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..
அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..
பசுமை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..
இயற்கை முறையில் முழுமையாக கட்டுப்படுத்துவது கடினமே.
கை களை எடுப்பது தான் சிறந்த முறை
