மா மரங்களில் பூக்கள் பூக்க வைப்பதற்கு மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்று கடினமான காரியம்.
சாதாரணமாக மாமரங்களில் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கின்றன .முதலில் பூ பூக்க ஆரம்பிப்பது செந்தூரமாகும் .கடைசியில் பூப்பது நீளமாகும்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரசால் , பங்கனபள்ளி ,பெங்களூரு ஆகியவை ஆகும். மா மரங்களுக்கு கொடுக்கவேண்டி அனைத்து இயற்கை உரங்களையும் ஆடி ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களிலேயே கொடுத்துவிட வேண்டும். கவாத்துஆடி மாதத்தில் முடித்துவிடவேண்டும்.
கற்பூர கரைசல் தெளிப்பதன் மூலம் அளவிற்கு அதிகமாக பூக்கள் தோன்றும் .இரண்டாவது இயற்கையாகவே மரங்கள் பழங்களை தாங்கும் அளவுக்கு காய்கள் நிற்கும் .மற்றும் மீன் அமிலம், தேங்காய் பால் ,கடலை புண்ணாக்கு கரைசல் பூக்கள் மீது தெளித்தால் 3மூ பூக்கள் உதிராமல் நிற்க வைக்கலாம். கற்பூர கரைசல் தொடர்ந்துதெளிப்பதால்பூச்சி தாக்குதலை முற்றிலும் தவிர்க்கலாம்.