ஊடு பயிரைத் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதி, பருவம், மண் வகைக்கு ஏற்ற வாறு தேர்வு செய்யவேண்டும். குறுகியகால பயராக இருக்க வேண்டும்.
வேகமாக வளர்ச்சி அடையாத தாகவும் குட்டையாகவும் இருக்க வேண்டும்.குறைந்த அளவு தண்ணீர் தேவையுடையதாக இருக்க வேண்டும்.
அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும் .மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இருக்கும் பயிர்களாக பயறு வகைகளை தேர்வு செய்யணும்.
ஊடுபயிர் அறுவடை செய்யும் முறை
ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்யவேண்டும். குறைந்த காலப் பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்துவிடலாம்.
ஊடுபயிர் கலைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதும் களையெடுக்கும் செலவை மிச்சப்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் ரெட்டிப்பு லாபத்தையும் பெறலாம். மேலும் ஊடுபயிரை சரியான தருணங்களில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.