எந்த வகையான பூச்சி தாக்குதலை எளிதாக கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பசுமாட்டு சிறுநீர் 15 லிட்டர் புகையிலை அரை கிலோ பச்சை மிளகாய் அரை கிலோ வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை மண்பானையில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். ஆற வைத்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
மண்பானையை இறக்கிய பிறகு மண்பானையின் வாயில் துணியை கொண்டு கட்டி 48 மணிநேரம் வைத்துவிட வேண்டும் .நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும் அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை மூன்று மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தலாம். புழு மற்றும் பூச்சிகளின் தாக்குதலும் காணப்பட்ட 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் அக்னி அஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்து தெளித்தால் போதும் . புழு மற்றும் பூச்சிகள் காணாமல் போய்விடும்.